சென்னை

ரௌடி கொலை வழக்கில் 6 பேர் கைது

DIN

சென்னை மதுரவாயலில் ரௌடி கொலை வழக்குத் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருகம்பாக்கம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ரெளடி, மணிகண்டன் (எ புறா மணி. இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்நிலையில் மணிகண்டன், மதுரவாயல் மார்க்கெட் அருகே கடந்த 13-ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
இதில், ரௌடிகளிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்குத் தொடர்பாக, நெற்குன்றத்தைச் சேர்ந்த சுல்தான், அவரது கூட்டாளிகள் நாகராஜ், அரவிந்த், அருண், ஆனந்த், விக்கி ஆகிய 6 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT