சென்னை

ரூ.4.50 லட்சம் போதைப் பாக்கு பறிமுதல்: 6 பேர் கைது

தினமணி

சென்னை புறநகர் பகுதியில் 7 இடங்களில் போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
 சென்னை குரோம்பேட்டை பகுதியில் போலீஸார் கடந்த 21-ஆம் தேதி நடத்திய சோதனையில், 5 டன் போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இந்த சோதனை தொடர்ந்தது. குரோம்பேட்டை, பல்லாவரம், ஹஸ்தினாபுரம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள 7 கடைகளில் இருந்து ரூ. 4.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்தக் கடைகளில் இருந்த ஸ்டீபன் கோபி (31), மகேந்திரன்(32), செல்வம் (31), முருகன் (50), செந்தில்குமார் (43), மனோகரன் (30) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT