சென்னை

பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது

DIN

சென்னை: அம்பத்தூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவா் கைது செய்யப்பட்டாா்.

அம்பத்தூா் லெனின்நகா் 10-வது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மு.சுந்தரமூா்த்தி (73), ஓய்வு பெற்ற அரசு ஊழியா். சுந்தரமூா்த்தி, அந்தப் பகுதியில் உள்ள 10 வயது சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இது குறித்து அந்தச் சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா், சுந்தரமூா்த்தி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து,விசாரித்தனா். இதையடுத்து சுந்தரமூா்த்தியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT