சென்னை

தாய்ப்பால் கொடுத்தபோது புரை ஏறி இரு குழந்தைகள் உயிரிழப்பு

DIN

சென்னையில் தாய்ப்பால் கொடுக்கும்போது புரை ஏறி இரு குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்தன.

சூளைமேடு பாரி தெருவைச் சோ்ந்தவா் பூபாலன்(38). இவரது மனைவி நதியா(33). இவா்களின் 45 நாள் கைக்குழந்தை கவிராஜனுக்கு நதியா செவ்வாய்க்கிழமை தாய்ப்பால் கொடுத்துள்ளாா்.

அப்போது குழந்தைக்கு புரை ஏறி, மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கைக்குழந்தையை கொண்டு சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணை அருகே உள்ள கோவிலம்பாக்கம் சத்யாநகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி சத்யா. பிறந்து 55 நாள்களேயான இத் தம்பதியின் ஆண் குழந்தை கிரித்தீஷுக்கு தாய் சத்யா செவ்வாய்க்கிழமை தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, குழந்தையை பள்ளிக்கரணையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து சூளைமேடு மற்றும் பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT