முகப்பு
சென்னை

இயந்திரக் கோளாறு: பிப். 5 வரை ஓட்டேரி எரியூட்டு மயானம் செயல்படாது

இயந்திரக் கோளாறு காரணமாக வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி வரை ஓட்டேரி எரியூட்டு மயானம் செயல்படாது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Updated On : 24 ஜனவரி 2019, 3:29 am IST
பகிர்:


இயந்திரக் கோளாறு காரணமாக வரும் பிப்ரவரி 5- ஆம் தேதி வரை ஓட்டேரி எரியூட்டு மயானம் செயல்படாது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்துக்கு உள்பட்ட ஓட்டேரி மயான பூமியில் எரியூட்டு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், பிப்ரவரி 5- ஆம் தேதி வரை ஓட்டேரி எரியூட்டு மயானம் செயல்படாது. இந்த நாள்களில் பொதுமக்கள் அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.