மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் கோயிலில் புதன்கிழமை (ஜூலை 17) முதல் ராமாயண பாராயண வகுப்பு தொடங்குகிறது. இந்த வகுப்புகள் ஒரு மாத காலம் நடத்தப்படும். தினமும் காலை 7.30 முதல் 9.30 மணி வரை நடைபெறும். ராமாயண பாராயண வகுப்பை எம் ஆர் ஆர் வாரியார், சாந்தா, பாலன், சிஎன்ஜி பணிக்கர் ஆகிய 4 பேர் தலைமை வகித்து நடத்துகின்றனர்
திருவிளக்குப் பூஜை: புதன்கிழமை முதல் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. தினமும் மாலை 6.45 மணி அளவில் மாளிகைப்புரத்தம்மன் பிராகாரத்தில் ஆகஸ்ட் 16 -ஆம் தேதி வரை இந்தப் பூஜை நடைபெறுகிறது.