சென்னை

கணினி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம்: அரசு உத்தரவு

DIN

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1, 880 தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் வழங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
 இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வி திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட 1,880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 2019-ஆம் ஆண்டு மார்ச் வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
 இந்தப் பணியிடங்களுக்கு மேலும் ஓராண்டு நீட்டிப்பு அளிக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கருத்துரு அனுப்பியிருந்தார். அதுதொடர்பாக சில கூடுதல் தகவல்கள் கோரப்பட்டு முதன்மைக் கல்வி அதிகாரிகளால் அவை சேகரிப்பட்டு வருவதால் அறிக்கை தயாரிக்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
 எனவே, ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதத்துக்கான ஊதியத்தை தர ஆணை வழங்கும்படி பள்ளிக்கல்வி இயக்குநர் அரசைக் கேட்டுள்ளார். அதையேற்று 1,880 தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் மற்றும் இதரப் படிகள் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT