சென்னை

திருட்டு வழக்கில் மாற்றுத் திறனாளி கைது

DIN

சென்னையில் கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக மாற்றுத் திறனாளி கைது செய்யப்பட்டார். அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பணம், பொருள்கள் திருடப்பட்டு வந்தன.  தனிப்படையினர், சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து இந்த திருட்டு வழக்குகளில் அரியலூர் மாவட்டம் பழமலைநாதபுரத்தைச் சேர்ந்த சிவா (34) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர் பேச இயலாத மாற்றுத் திறனாளியாவார்.
கடத்தப்பட்ட ரூ.60 லட்சம் குங்குமப்பூ பறிமுதல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பிலான, கடத்தி வரப்பட்ட ஈரானிய குங்குமப்பூவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 
விமான நிலைய வரவேற்பறையில் சந்தேகப்படும்படியான ஒரு நபரின் நடவடிக்கையைக் கண்காணித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனையிட்டனர். அதில் ரூ.60 லட்சம் மதிப்பிலான 31 கிலோ எடையுள்ள ஈரானிய குங்குமப் பூ பறிமுதல் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து இதை கடத்தி வந்த பயணி சாகுல் ஹமீதை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT