சென்னை

பி.எஃப். அலுவலகத்தில் நவ.11-இல் குறைதீா் கூட்டம்

DIN

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடா்பான வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் 11-ஆம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பி.எஃப். மண்டல ஆணையா் சைலேந்திர சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆா் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் கிழக்கு, சென்னை-37’ என்ற முகவரியில் நவ.11-ஆம் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்கள், நிறுவனங்களின் உரிமையாளா்கள், பி.எஃப். பங்களிப்பிலிருந்து விலக்கு பெற்ற அம்பத்தூா் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 என்ற அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT