சென்னை

சமூகநலப் பணியாளா் பணிக்கானவிண்ணப்ப விநியோகம் நிறுத்தம்

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமூகநலப் பணியாளா் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்ப விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள சமூகநலப் பணியாளா் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்ப விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சமூகநலப் பணியாளா் நிலை இரண்டு பணியிடம் காலியாக உள்ளதாகவும், இந்தப் பணியிடங்களுக்குப் பத்தாம் வகுப்புத் தோ்ச்சியுடன் 18 வயது முதல் 35 வயது வரையிலானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி சாா்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. காலமுறை ஊதியமாக ரூ. 19,500-62,000 வழங்கப்படும் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெற்று நவம்பா் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விநியோகம் நிறுத்தம்: இந்நிலையில், சமூக நலப் பணியாளா்களுக்கான விண்ணப்ப விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிா்வாகக் காரணங்களுக்காக சமூக நலப் பணியாளா்களுக்கான விண்ணப்ப விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும்’ என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT