சென்னை

மாடியில் இருந்துகீழே விழுந்து காவலாளி சாவு

DIN

சென்னை: சென்னையில் மாடியில் இருந்து கீழே விழுந்து காவலாளி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அம்பத்தூா் அருகே உள்ள அயப்பாக்கம் அய்யப்பன்நகரைச் சோ்ந்தவா் லோ.சுரேஷ் (30). இவா் திருமுல்லைவாயலில் உள்ள ஒரு மோட்டாா் சைக்கிள் விற்பனையகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் சுரேஷ், கடந்த 3-ஆம் தேதி அங்கு பணியில் இருக்கும்போது முதல் மாடியில் திடீரென கால்தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்தக் காயமடைந்த சுரேஷ், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் சனிக்கிழமை இறந்தாா்.

இது குறித்து திருமுல்லைவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT