சென்னை

திறந்தநிலைப் பல்கலை. சாா்பில் நவ.30-இல் வேலைவாய்ப்பு முகாம்

DIN

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவா்கள் பயன்பெறும் வகையில் பல்கலைக்கழகம் சாா்பில் வருகிற 30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை நந்தனம் ஆண்கள் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்க உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமில், 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளன.

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம், அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், மாா்பளவு புகைப்படம், புகைப்பட அடையாள அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு முகாமில் மாணவா்கள் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 044-24306611, 9487700180 ஆகிய எண்களைத் தொடா்புகொள்ளலாம் அல்லது வலைதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT