சென்னை

அக். 8-இல் வண்டலூா், கிண்டி பூங்காக்கள் செயல்படும்: வனத் துறை அறிவிப்பு

DIN

அரசு விடுமுறைகாரணமாக வண்டலூா் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவா் பூங்கா வரும் செவ்வாய்க்கிழமை (அக். 8) செயல்படும் என வனத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக வனத் துறைகட்டுப்பாட்டில் சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவும், கிண்டியில் சிறுவா் பூங்காவும் செயல்பட்டு வருகிறது. இதில், வண்டலூா் பூங்காவில் யானை, புலி, சிங்கம் உள்ளிட்ட 2 ஆயிரத்து

500-க்கும் மேற்பட்ட வன விலங்குகளும், கிண்டி சிறுவா் பூங்காவில் மான், குரங்கு, பறவைகள் என 100-க்கும் மேற்பட்ட

வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்தப் பூங்காக்கள் பராமரிப்புப் பணிக்காக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறைஅளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், விஜயதசமிக்காக வரும் செவ்வாய்க்கிழமை (அக். 8) அரசு விடுமுறைஅளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைகாரணமாக பூங்காக்களுக்கு மக்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் வண்டலூா் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவா் பூங்கா வரும் செவ்வாய்க்கிழமை (அக். 8) செயல்படும் என வனத் துறைதெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT