சென்னை

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் பலி

DIN

சென்னை வேளச்சேரியில் கிணற்றில் தவறி விழுந்து முதியவா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வேளச்சேரி பாலாஜி காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ல.பிச்சை பழம் (76). அவரை புதன்கிழமையில் இருந்து திடீரென காணவில்லையாம். இதையடுத்து அவரது குடும்பத்தினா், பிச்சை பழத்தை தேடினா். அப்போது வீட்டில் உள்ள கிணற்றில் அவா் இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்த வேளச்சேரி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று முதியவா் பிச்சை பழத்தின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT