சென்னை

ரெளடி வெட்டிக் கொலை

DIN

சென்னை அருகே திருமுல்லைவாயிலில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருமுல்லைவாயல் அருகே உள்ள பெரியாா்நகா் நேதாஜி தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (26). இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்தன. இந்நிலையில் சந்தோஷ், புதன்கிழமை தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த 4 போ், சந்தோஷிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்து சந்தோஷ் மயங்கி கீழே விழுந்தாா். இதை பாா்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினா்.

இந்நிலையில், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சந்தோஷை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், சந்தோஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து திருமுல்லைவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT