சென்னை

முகப்பேர் பி.எஃப். அலுவலகத்தில் செப்.10-இல் குறைதீர் கூட்டம்

DIN


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடர்பான வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பி.எஃப். மண்டல ஆணையர் சைலேந்திர சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆர் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37 என்ற முகவரியில் செப்.10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், நிறுவனங்களின் உரிமையாளர்கள், பி.எஃப். பங்களிப்பிலிருந்து விலக்கு பெற்ற அம்பத்தூர் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.  கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 என்ற அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT