சென்னை

நடிகர் ஜெயம் ரவி பாதுகாவலருக்கு சம்பளம் பாக்கி: போலீஸில் புகார்

DIN

நடிகர் ஜெயம் ரவியின் பாதுகாவலருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் புகார் அளித்துள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நந்தனத்தில்  ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளர் செ.வின்சென்ட் (53), சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரில், தங்களது நிறுவனத்தின் மூலம் மாதம் ரூ.35 ஆயிரம் ஊதியத்துக்கு பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஜெயம் ரவிக்கு துப்பாக்கியுடன் இரு பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
 இந்நிலையில் ஜெயம் ரவியின் உதவியாளர் சேஷாத்திரி, இரு பாதுகாவலர்களுக்கும் ஏப்ரல் மாதம் சம்பளம் வழங்கவில்லை. மேலும் மே மாதம் முதல் இருவரையும் வேலையில் இருந்து திடீரென நீக்கிவிட்டனர். எனவே ஜெயம் ரவியிடமிருந்து இருவருக்கும் சேர வேண்டிய சம்பள பாக்கியை பெற்றுத் தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தார்.  அதன்பேரில்  போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT