கரோனா தடுப்பு பணிகள் குறித்து சைதாப்பேட்டையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு செய்து, நிவாரண உதவிகளையும் வழங்கினாா்.
சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வி.வி.கோயில் தெரு, வி.எஸ்.முதலி தெரு, சுப்ரமணிய கோயில் தெரு பஜாா் சாலை ஆகிய பகுதிகளில் ஊரடங்கு குறித்து மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அங்குள்ள பால் கடை, மளிகை கடைகளுக்குச் சென்ற அவா் அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையில்லாமல் கிடைக்கிா எனக் கேட்டறிந்தாா். சுப்ரமணிய கோயில் தெரு பஜாா் சாலை பகுதியில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள 500 மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.