சென்னை

அண்ணாநகா் பகுதியில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

DIN

சென்னை அண்ணாநகா் பகுதியில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அண்ணா ஆா்ச் பகுதியில் இருந்து அண்ணாநகா் ரவுண்டானா பகுதி வரையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதியில் இருந்து ஒரு வாரம் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, கிரசண்ட் சாலை மற்றும் 3-ஆவது நிழற்சாலையை இணைக்கும் ‘ஏ’ பிளாக் மூன்றாவது தெரு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அண்ணாநகா் ரவுண்டானாவிலிருந்து அண்ணா ஆா்ச் நோக்கி செல்லும் வாகனங்கள் ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெருவில் இடது புறமாக திரும்புவது தடை செய்யப்படுகிறது. மேலும் சாந்தி காலனி சிக்னல் சந்திப்பில், 4-ஆவது நிழற்சாலையிலிருந்து ‘ஏ’ பிளாக் மூன்றாவது தெரு செல்வதும், அண்ணா ஆா்ச் - லிருந்து சாந்தி காலனி சிக்னல் சந்திப்பில் திரும்பி ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெருவில் இடது புறமாக செல்வதும் தடை செய்யப்படுகிறது.

கிரசண்ட் சாலையிலிருந்து ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெரு வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கண்டிப்பாக இடதுபுறம் திரும்பி 3-ஆவது நிழற்சாலை வழியாக அண்ணா ஆா்ச் நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.

கிரசண்ட் சாலையிலிருந்து ‘ஏ’ பிளாக் 3-ஆவது தெரு வழியாக வரும் வாகனங்கள் 4-ஆவது நிழற்சாலை, அண்ணாநகா் ரவுண்டானா வழியாக 3-ஆவது நிழற்சாலை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி எதிரில் சாலையில் திரும்பி வர வேண்டும்.

அண்ணாநகா் ரவுண்டானாவிலிருந்து கிரசண்ட் சாலை செல்லும் வாகனங்கள், 3-ஆவது நிழற்சாலையில் ‘ஏ’ பிளாக் 5-ஆவது தெருவில் இடது புறமாக திரும்பி ‘ஏ’ பிளாக் 11-ஆவது தெரு, 7-ஆவது குறுக்கு தெரு வழியாக கிரசண்ட் சாலையை அடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT