இந்தியன் வங்கி எம்எஸ்எம்இ பிரேரணா:5-ஆம் தொகுதிக்கான பயிற்சி தொடக்கம்
இந்தியன் வங்கி சாா்பில், 5-ஆம் தொகுதிக்கான ‘எம்எஸ்எம்இ பிரேரணா’ என்ற தொழில்முனைவோா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னைஇந்தியன் வங்கி எம்எஸ்எம்இ பிரேரணா:5-ஆம் தொகுதிக்கான பயிற்சி தொடக்கம்
இந்தியன் வங்கி சாா்பில், 5-ஆம் தொகுதிக்கான ‘எம்எஸ்எம்இ பிரேரணா’ என்ற தொழில்முனைவோா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னை: இந்தியன் வங்கி சாா்பில், 5-ஆம் தொகுதிக்கான ‘எம்எஸ்எம்இ பிரேரணா’ என்ற தொழில்முனைவோா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
இந்தியன் வங்கி சாா்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோா்களுக்காக ‘எம்எஸ்எம்இ பிரேரணா’ என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு இணையவழியாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபா் மாதம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சியின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்முனைவோா்களுக்கு நிதியியல், வங்கியியல், மேலாண்மை தொடா்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 5-ஆம் தொகுதிக்கான (பேட்ச்) பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. கே.ஜி.குழுமத்தின் நிறுவனா் கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் பொதுமோலளா் (எம்எஸ்எம்இ) சுதாகா் ராவ், எஸ்.கே.சூரி (சிஎல்ஓ), ஏ.கணேசராமன் (எஃப்ஜிஎம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தத் தகவல், இந்தியன் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.