சூர்யா (27), மென்பொருள் நிறுவன ஊழியர், கந்தன்சாவடி, சென்னை:
ஆங்கில எழுத்தாளர் அகஸ்டியின் துப்பறியும் நாவல்கள், சிவசர்மாவின் நாவல்கள், ஜெயகாந்தன் படைப்புகளை வாங்க விரும்பி அவற்றை வாங்கியுள்ளேன். ரமணிசந்திரனின் படைப்புகளைத் தேடி வாங்க உள்ளேன். ராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்களின் துப்பறியும் நாவல்கள் வெளியில் கிடைப்பதில்லை. ஆகவே புத்தகக் காட்சியில் வாங்கிச் செல்லவுள்ளேன்.