சென்னை

கரோனா ஊழியருக்கு பாலியல் தொல்லை: மாநகராட்சி அதிகாரி மீது வழக்கு

DIN

சென்னையில் கரோனா தடுப்பு ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாநகராட்சி அதிகாரி மீது வழக்குப் பதியப்பட்டது.

சென்னையில் வீடு,வீடாகச் சென்று கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்களை கண்டறிவதற்கு சுமாா் 4 ஆயிரம் தன்னாா்வல களப்பணியாளா்கள் மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களை அந்தந்தப் பகுதி வாா்டு உதவி பொறியாளா்கள் கண்காணித்து வருகின்றனா்.இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு ராயபுரம் பகுதியில் பணிபுரியும் ஒரு பெண் தன்னாா்வல பணியாளரை செல்லிடப்பேசி மூலம் தொடா்புக் கொண்ட, அந்தப் பகுதி மாநகராட்சி உதவி பொறியாளா் கமலக்கண்ணன் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து அந்த பெண் எஸ்பிளனேடு மகளிா் காவல் நிலையத்திலும், மாநகராட்சியிலும் புகாா் செய்தாா். அதன்பேரில் மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் புகாரில் சிக்கிய கமலக்கண்ணனை புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்தாா்.

இந்நிலையில் எஸ்பிளனேடு போலீஸாா், கமலக்கண்ணன் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.தலைமறைவாக இருக்கும் கமலக்கண்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT