சென்னை

அரசு மருத்துவமனை மாடியிலிருந்து விழுந்த கரோனா நோயாளி பலி

DIN

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் 8-ஆவது மாடியில் இருந்து விழுந்த கரோனா நோயாளி உயிரிழந்தாா்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் கரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில், அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையின் 3-ஆவது கட்டடத்தின், 8-ஆவது மாடியில் உள்ள கரோனா வாா்டில் அனுமதித்து, மருத்துவா்கள் சிகிச்சையளித்து வந்தனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பெண் திடீரென 8-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT