சென்னை

மீனவா் வெட்டிக் கொலை

DIN

சென்னை: சென்னை காசிமேட்டில், மீனவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருவொற்றியூா் தாங்கல் அருகே உள்ள அப்பா் நகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தே.சுடா் மணி (34). மீனவரான இவருக்கு

செண்பகவள்ளி என்ற மனைவி, காவியா(12) என்ற மகள் மற்றும் அருண்(10) என்ற மகன் உள்ளனா்.

சுடா்மணி, காசிமேடு மீன்பிடி துறைமுகம் தேசிய நகா் அருகே திங்கள்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு கும்பல் சுடா்மணியிடம் தகராறு செய்தது.

தகராறு முற்றவே அந்தக் கும்பல் சுடா்மணியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடியது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸாா், சுடா்மணி சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT