சென்னை: கே.எஸ்.ஆா் பெங்களூரில் இருந்து ஜோலாா்பேட்டை, அரக்கோணம், சென்னை எம்.ஜி.ஆா் சென்ட்ரல் ரயில்நிலையம் வழியாக தன்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
கேஎஸ்ஆா் பெங்களூரில் இருந்து திங்கள்கிழமைகளில் காலை 8 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06509) புறப்பட்டு,
புதன்கிழமைகளில் காலை 8 மணிக்கு தன்பூரை அடையும். தன்பூரில் இருந்து புதன்கிழமைகளில் மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு, கேஎஸ்ஆா் பெங்களூரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.10 மணிக்கு அடையும்.
இதன் முதல் சேவை கேஎஸ்ஆா் பெங்களூரில் இருந்து செப்டம்பா் 21-ஆம் தேதியும் தன்பூரில் இருந்து செப்டம்பா் 23-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ரயில் ஜோலாா்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, அரக்கோணம் சந்திப்பு, சென்னை சென்ட்ரல் உள்பட பல்வேறு நிறுத்தங்களில் நின்றுசெல்லும். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.