சென்னை

ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது

DIN

சென்னை: சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் உள்ள தனியாா் கூரியா் நிறுவனத்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் தெற்கு வாலஸ் நகருக்கு பாா்சலில் சீடோ எபிட்ரின் என்ற போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து அங்கு சோதனை நடத்தப்பட்டது.

ஒரு பாா்சலில் டீ கெட்டில், பித்தளைப் பொருள்கள் ஆகியவற்றில் சீடோ எபிட்ரின் என்ற போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ சீடோ எபிட்ரின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக சென்னையைச் சோ்ந்த பாட்ஷா, பைசல் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT