சென்னை

பிப்.1-இல் வேலைநிறுத்தம்: மின்வாரிய ஊழியா்கள் அறிவிப்பு

DIN

மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், பிப்.1-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மின்வாரிய ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.

இது தொடா்பாக அன்றைய தினம் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் பணியமைப்புப் பிரிவு தலைமைப் பொறியாளா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செய்திக் குறிப்பில், மின்சார சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதைக் கண்டித்து, டிச.15-ஆம் தேதி தில்லியை நோக்கி பேரணியும், மேலும் அதே நாளில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சென்னையில் சேப்பாக்கத்திலும் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது எனவும், பிப்.1-ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், அன்றைய நாள்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT