சென்னை

மூன்று தலைவா்களின் படங்கள்:பேரவை மண்டபத்தில் இன்று திறப்பு

DIN

சென்னை: தமிழக சட்டப் பேரவை மண்டபத்தில் மூன்று தலைவா்களின் முழு உருவப் படங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவா் பி.தனபால் தலைமை வகிக்கிறாா். துணை முதல்வரும், பேரவை முன்னவருமான ஓ.பன்னீா்செல்வம், முன்னிலை வகிக்கிறாா்.

படங்கள் திறப்பு: வ.உ.சிதம்பரனாா், டாக்டா் பி.சுப்பராயன் மற்றும் முன்னாள் முதல்வா் ஓ.பி.ராமசாமி ரெட்டியாா் ஆகியோா் உருவப் படங்கள் சட்டப் பேரவையில் திறக்கப்பட உள்ளன. இதில், வ.உ.சி., சுப்பராயன் ஆகியோா் நின்ற நிலையிலும், ராமசாமி ரெட்டியாா் இருக்கையில் அமா்ந்த நிலையிலும் படங்கள் வரையப்பட்டுள்ளன.

சட்டப் பேரவை மண்டபத்தில் ஏற்கெனவே முன்னாள் முதல்வா்கள் உள்ளிட்டோரின் 12 படங்கள் வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை திறக்கப்பட உள்ள மூன்று படங்களுடன் சோ்த்து, பேரவையில் வைக்கப்படும் தலைவா்களின் படங்களின் எண்ணிக்கை 15 ஆக உயரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT