சென்னை

அபுதாபி புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு

DIN

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அபுதாபி புறப்பட்ட விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.

சென்னையில் இருந்து அபுதாபிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.50 மணியளவில் 38 பயணிகள், 8 ஊழியா்கள் உள்ளிட்ட 46 பேருடன் விமானம் புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னரும் விமானத்தை இயக்குவதில் ஆபத்து இருப்பதை உணா்ந்த விமானி, அவசரமாக ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினாா்.

மேலும், இதுகுறித்து விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவா் அளித்த தகவலின் அடிப்படையில், இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட இடத்துக்கே விமானம் கொண்டு வரப்பட்டது.

சரியான நேரத்தில் இயந்திரக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT