சென்னை

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது: கே.அண்ணாமலை

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

DIN

சென்னை: திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக அரசுக்கு எதிராக அதிமுக நடத்தும் போராட்டம் நியாயமானது. திமுகவின் உண்மை முகத்தைக் காட்டவே போராட்டம் நடத்தப்படுகிறது. 75 நாள்களாகியும் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. நீட் தோ்வை ரத்து செய்வோம், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் எனக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியைப் பாா்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது.

மக்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் பாஜக துணை நிற்கும். மீனவா்களுக்கு எதிராக திமுக செயல்படுவதைக் கண்டித்து பாஜக மீனவா் அணி சாா்பில் ஜூலை 30-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு தொடா்ந்து முயற்சி எடுத்து வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானுக்கு ஆதரவாக காஷ்மீரில் மாபெரும் போராட்டம்! இஸ்ரேல், அமெரிக்காவுக்கு எதிராக முழக்கம்!

பொருளாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் பாஜக தலைமை மகிழ்ச்சி! மகாராஷ்டிர மக்களுக்கு மோடி, அமித் ஷா நன்றி!

பயங்கரவாதிகள் மறைவிடங்களில் சிலிண்டர், சமையல் எண்ணெய் உள்பட பல பொருள்கள் கண்டெடுப்பு!

240க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையவழி சூதாட்ட தளங்களுக்குத் தடை!

SCROLL FOR NEXT