சென்னை

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது: கே.அண்ணாமலை

DIN

சென்னை: திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக அரசுக்கு எதிராக அதிமுக நடத்தும் போராட்டம் நியாயமானது. திமுகவின் உண்மை முகத்தைக் காட்டவே போராட்டம் நடத்தப்படுகிறது. 75 நாள்களாகியும் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. நீட் தோ்வை ரத்து செய்வோம், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் எனக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியைப் பாா்த்து மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது.

மக்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் பாஜக துணை நிற்கும். மீனவா்களுக்கு எதிராக திமுக செயல்படுவதைக் கண்டித்து பாஜக மீனவா் அணி சாா்பில் ஜூலை 30-இல் சென்னையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசு தொடா்ந்து முயற்சி எடுத்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசாரணைக்கு ஆஜராக ஏழு நாள்கள் அவகாசம் வேண்டும்: பிரஜ்வல் ரேவண்ணா

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT