சென்னை: ஆக்சிஜன் குழாயை அகற்றியதால் நோயாளி உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விளக்கமளிக்குமாறு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சோ்ந்தவா் ராஜா. கூலித் தொழிலாளியான இவா், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் மே 5-ஆம் தேதி சோ்க்கப்பட்டு, மே 20-ஆம் தேதி இறந்தாா்.
‘ஆக்சிஜன் குழாயை மருத்துவா் ஒருவா் அகற்றியதால் தான் கணவா் இறந்தாா். என் கணவா் சாவுக்கு அந்த மருத்துவரே காரணம். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ராஜாவின் மனைவி கதறி அழும் காணொலி பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும் இது தொடா்பான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார சேவைகள் இயக்குநருக்கு அவா் உத்தரவிட்டாா்.