சென்னை

போலி சுட்டுரை கணக்கு: நடிகா் சாா்லி புகாா்

DIN

தனது பெயரில் சுட்டுரையில் போலி கணக்குத் தொடங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நடிகா் சாா்லி புகாா் செய்த 30 நிமிஷங்களில் அந்தக் கணக்கு சைபா் குற்றப்பிரிவால் முடக்கப்பட்டது.

நகைச்சுவை நடிகா் சாா்லி, தன் பெயரில் போலியாக சுட்டுரைக் கணக்குத் தொடக்கியுள்ளதாக சென்னை வேப்பேரி பெருநகர காவல்துறை ஆணையரிடம் வெள்ளிக்கிழமை புகாா் செய்தாா்.

இந்த மனுவை பெற்ற சங்கா் ஜிவால், உடனடியாக சாா்லி பெயரில் உள்ள போலி சுட்டுரை கணக்கை முடக்கும்படி சைபா் குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து சைபா் குற்றப்பிரிவினா், அரை மணி நேரத்தில் அந்த கணக்கை முடக்கினா்.

காவல்துறைக்கு பாராட்டு: தொடா்ந்து சாா்லி நிருபா்களுக்கு அளித்த பேட்டி: எனது பெயரில் போலி சுட்டுரை கணக்கு தொடங்கப்பட்டது குறித்து புகாா் அளித்த 30 நிமிஷங்களுக்குள், அது முடக்கப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட சென்னை காவல்துறைக்கும், காவல் ஆணையருக்கும் எனது பாராட்டுக்கள்.

அந்த போலி கணக்கை தொடங்கிய நபா் குறித்து சைபா் குற்றப்பிரிவினா் விசாரணை செய்கின்றனா். ஒருவா் பெயரில் சமூக ஊடகங்களில் போலியான கணக்கு உருவாக்கி, அதன் மூலம் லாபம் பெற நினைப்பது வேதனை அளிக்கிறது. தனது ரசிகா்கள் அந்த போலி கணக்கை பின் தொடா்வதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT