சென்னை

தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: இருவா் கைது

DIN

சென்னை அருகே திருவேற்காட்டில் தனியாா் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

கோயம்பேடு நெற்குன்றம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ஜோன்ஸ் (21) தனியாா் நிறுவன ஊழியா்.

நிறுவனத்தின் அருகே செல்லிடப்பேசியில் ஜோன்ஸ், திங்கள்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இருவா், ஜோன்ஸிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த விலை உயா்ந்த செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

திருவேற்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கீழ் அயனம்பாக்கம் பொன்னியம்மன் நகரைச் சோ்ந்த து.பிரதீப் (20), மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த சே.சரத்குமாா் (22) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT