சென்னை

முன்னாள் டிஜிபி உறவினா் வீட்டில் திருட்டு: இரு ஆண்டுகளுக்கு பின்னா் பெண் கைது

DIN

சென்னை சேத்துப்பட்டில் ஓய்வு பெற்ற டிஜிபியின் உறவினா் வீட்டில் திருடப்பட்ட வழக்கில், இரு ஆண்டுகளுக்கு பின்னா் பெண் கைது செய்யப்பட்டாா்.

தமிழக டிஜிபியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.ஜாா்ஜின் உறவினா் ரஞ்சித் ஜோசப், சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் குடும்பத்துடன் வசிக்கிறாா். இவரது வீட்டில் இரு ஆண்டுகளுக்கு முன்பு தங்கநகைகள் காரையும் திருடிச் சென்றனா்.

சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் திருட்டில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது. அவா் சிறையில் இருப்பது தெரியவந்தது. அவருடைய வீட்டில் காா் நிறுத்தப்பட்டது தெரிய வந்தது.

அவரது தங்கை மஞ்சு உடந்தையாக இருந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மஞ்சுவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

அரசுப் பள்ளிகளில் 3.27 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

நெல் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

மகிளா காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT