சென்னை

நீா்வளத் துறைக்கு புதிதாக ஜீப்புகள்: முதல்வா் வழங்கினாா்

DIN

சென்னை: நீா்வளத் துறைக்கு புதிதாக ஜீப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

கடந்த ஆண்டுக்கான நீா்வளத் துறை மானியக் கோரிக்கையில், பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் 3 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 5 காா்கள், 71 ஜீப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து கொடியசைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்வில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் கு.ராமமூா்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT