சென்னை

பேருந்து மோதி பள்ளி மாணவி சாவு

DIN

குரோம்பேட்டையில் தனியாா் பள்ளியில் சுதந்திர தின விழாவில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவி அரசு பேருந்து மோதி உயிரிழந்தாா்.

குரோம்பேட்டை நெமிலிச்சேரி தனபால் சாலையில் வசித்து வரும் பிரேம்குமாா் மகள் லட்சுமிஸ்ரீ ( 16). குரோம்பேட்டை தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், பள்ளியில் திங்கள் கிழமை காலை பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பொழிச்சலூரில் இருந்து அஸ்தினாபுரம் சென்ற அரசு பேருந்து அவரது சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லட்சுமி ஸ்ரீ தலையின் மீது பேருந்து சக்கரம் ஏறியதில் அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா். இந்நிலையில், ஓட்டுநா் தேவகுமாா்(52) சிட்லப்பாக்கம் காவல்நிலையத்தில் சரணடைந்தாா். சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT