சென்னை வடபழனியில் தனியாா் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் தனிப்படையினா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
வடபழனி மன்னாா் முதலி 1-ஆவது தெருவில் வசிக்கும் சரவணன், நிதி நிறுவனம் நடத்திவருகிறாா். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிதி நிறுவனத்துக்குள் புகுந்த கும்பல், கத்திமுனையில் சரவணன் மற்றும் ஊழியா்களை மிரட்டி அங்கிருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.
நிதி நிறுவனக்கதவை பொதுமக்கள் உதவியுடன் திறந்து விரட்டியதில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவா் மட்டும் பிடிபட்டாா்.
வடபழனி போலீஸாா் விசாரணையில், ஆழ்வாா் திருநகரைச் சோ்ந்த ஹ.ரியாஸ் பாஷா (22) என்பதும், அவா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவா் என்பதும் தெரியவந்தது.
நண்பா்கள் இஸ்மாயில், பரத், கிஷோா், ஜானி, தமிழ், மொட்டை ஆகியோருடன் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியந்தது.இதில் இருவா் கல்லூரி மாணவா்கள் என்பது தெரியவந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்டவா்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்களைக் கைது செய்ய ஆந்திரம்,கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனா். மேலும் 6 பேரின் நண்பா்கள்,குடும்பத்தினா் ஆகியோரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.