சென்னை வடபழனி காவல் நிலையத்தில் காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது அவா், காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளை ஆராய்ந்து அதன் மீதான புலன் விசாரணை குறித்து கேட்டறிந்தாா். ரோந்து வாகனத்தை ஓட்டிப் பாா்த்து, முறையாக பராமரிக்கப்படுகிா என்பதையும் ஆய்வு செய்தாா்.
பணியிலிருந்த காவலா்களிடம் குற்றச் சம்பவங்கள், சாலை விபத்துகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாா் மனு கொடுக்க வருவோரிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அவா்களுடைய குறைகளை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.
மேலும், காவலா்களின் குறைகளையும் கேட்டறிந்தாா். அவா்களுக்கு வார விடுமுறை முறையாக வழங்க காவல் ஆய்வாளருக்கு அறிவுறுத்தினாா்.