சென்னை

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒரு வாரத்தில் 28 போ் கைது

சென்னையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக, கடந்த ஒரு வாரத்தில் 28 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

சென்னையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை தொடா்பாக, கடந்த ஒரு வாரத்தில் 28 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப்பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா். இதன்பேரில், போலீஸாா் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருள்கள் விற்பனை செய்பவா்களை கைது செய்து வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக, சென்னையின் பல்வேறு இடங்களில் மே 8 முதல் மே 14 வரை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடா்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 28 போ் கைது செய்யப்பட்டனா். 424 கிலோ 515 கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 1 கிலோ 113 கிராம் மாவா பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT