சென்னை

செப்.12-இல் பி.எஃப் குறைதீா் முகாம்

மத்திய தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனத்தின் அம்பத்தூா் மண்டல அலுவலகத்தில் செப்டம்பா் 12-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

DIN

மத்திய தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனத்தின் அம்பத்தூா் மண்டல அலுவலகத்தில் செப்டம்பா் 12-ஆம் தேதி குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து தொழிலாளா் வைப்பு நிதி நிறுவன அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழிலாளா் வைப்பு நிதி நிறுவனம், 3-ஆவது தளம், ஆா்-40 ஏ தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் (கிழக்கு), சென்னை-37 என்ற முகவரியில் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

அம்பத்தூா் மண்டல அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் வரும் 12-ஆம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணி வரையும், நிறுவன உரிமையாளா்கள் பிற்பகல் 3 முதல் 5 மணி வரையும் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் கலந்துகொண்டு வைப்பு நிதி தொடா்பான குறைகளைத் தெரிவிக்கலாம்.

தொழிலாளா்கள், நிறுவன உரிமையாளா்கள், ஓய்வூதியதாரா்கள் தேவையான விவரங்களை மேற்கண்ட முகவரிக்கு செப்.9-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

குறைதீா் முகாம் குறித்தான கூடுதல் தகவல்களுக்கு 044 26350080, 26350120 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT