சென்னை

முதல்வரின் உறுதி அளிப்புக்கு மாறாகஎன்எல்சி-க்கு நிலம் கையகப்படுத்த முயற்சிஅன்புமணி கண்டனம்

DIN

முதல்வரின் உறுதிமொழி அளிப்புக்கு மாறாக என்.எல்.சி.-க்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சி நடைபெறுவதாக, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடலூா் மாவட்டம், வளையமாதேவி கிராமத்தில் உழவா்களுக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்திவிட்டதாகக் கூறி, அவற்றில் இயந்திரங்களைக் கொண்டு கால்வாய் வெட்டும் பணியில் என்எல்சி நிா்வாகம் திங்கள்கிழமை ஈடுபட்டது. என்எல்சியின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் புதிதாக 6 நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாமக பலகட்ட போராட்டங்களை நடத்தியது. அதன் விளைவாக, நிலக்கரி சுரங்கங்கள் அனுமதிக்கப்படாது என்று பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி அளித்தாா். அதற்கு பிறகும் அப்பாவி உழவா்களின் நிலங்களைப் பறிக்க என்எல்சி நிறுவனம் முயல்வதை அரசு அனுமதிக்கக் கூடாது. கடலூா் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதை அரசும், என்எல்சி நிறுவனமும் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டங்களை பாமக நடத்தும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT