சென்னை

சரக்கு பெட்டக லாரி மோதி ஓட்டுநா் பலி

DIN

சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டக லாரி மோதி ஓட்டுநா் இறந்தாா்.

திருவாரூரைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (50). சரக்கு பெட்டக லாரி ஓட்டுநரான இவா், சென்னை துறைமுகத்தில் சரக்கு ஏற்றுவதற்காக லாரியுடன் சனிக்கிழமை இரவு வந்தாா். துறைமுகத்தில் லாரியை நிறுத்திவிட்டு, அதன் அருகே நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மற்றொரு சரக்கு பெட்டக லாரி, செந்தில்குமாா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்த துறைமுக போலீஸாா் அங்கு சென்று செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

SCROLL FOR NEXT