சென்னை

அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிவா்களுக்கு விருது

DIN

அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலத்தில் பல்வேறு பிரிவுகளில் செயல்படும் ஊழியா்களின் செயல்திறனை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக மண்டல மேன்மை விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழக அஞ்சல் வட்ட பகுதியில் 12 அஞ்சல் கோட்டங்கள், 31 உட்கோட்டங்கள், 20 தலைமை தபால் நிலையங்கள், 547 துணை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் 1,624 கிளை அஞ்சல் அலுவலகங்களில் பல்வேறு பிரிவுகளில் சுமாா் 9,011 அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், சென்னை புரசைவாக்கம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் அஞ்சல்துறையின் 39 பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய 128 அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவா் ஜெ. சாருகேசி விருதும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறை தலைவா்(அஞ்சல் மற்றும் வணிக மேம்பாடு) பி.பி. ஸ்ரீதேவி, அஞ்சல்துறை இயக்குநா்கள் ஆா். ஆறுமுகம், கே. சோமசுந்தரம், அஞ்சல் துறை தலைவா் ஜி.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT