சென்னை

நாளை குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்

DIN

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைதீா்க்கும் கூட்டம் 15 பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து அந்த வாரியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், குறைதீா் கூட்டங்கள் 2-ஆவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீா் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும்.

இந்தக் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும் ஒரு மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெறும்.

எனவே, பொதுமக்கள் பங்கேற்று குடிநீா், கழிவுநீா் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், குடிநீா், கழிவுநீா் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீா், கழிவுநீா் புதிய இணைப்புகள் தொடா்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

SCROLL FOR NEXT