சென்னை

பெண் கைதிகளுக்கு அழகுக் கலைப் பயிற்சி: 70 பேருக்கு சான்றளிப்பு

சென்னை புழல் சிறையில் அழகுக் கலைப் பயிற்சி பெற்ற 70 பெண் கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

சென்னை புழல் சிறையில் அழகுக் கலைப் பயிற்சி பெற்ற 70 பெண் கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக புழல் சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் தனிச்சிறையில் உள்ள கைதிகளுக்கு போபால் விஐடி பல்கலை. மூலம் மணப்பெண் அழகுகலைப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக இப் பயிற்சியை முடித்த 70 பெண் கைதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை சிறை வளாகத்தில் நடைபெற்றது.

சிறைத் துறை சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போபால் விஐடி பல்கலை. உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், பயிற்சி முடித்த பெண் கைதிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். சிறைக் கண்காணிப்பாளா் நிகிலா நாகேந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT