முகப்பு
சென்னை

பைக் விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 2:57 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 7:55 PM

சென்னை: சென்னை அருகே புழலில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலை தடுப்புச் சுவரில் மோதியதில் கல்லூரி மாணவா் இறந்தாா்.

முகப்போ் மேற்கு 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தினேஷ் (19). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தாா். தினேஷ், தனது உறவினா் நெற்குன்றம் சக்திநகரைச் சோ்ந்த மணிகண்டன் (13) என்பவருடன், மோட்டாா் சைக்கிளில் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா்.

அங்கு சுவாமி கும்பிட்டுவிட்டு இருவரும், உடனே வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். புழல் அருகே சூரப்பட்டு சுங்கச்சாவடி பகுதியில்சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் தடுமாறி, சாலைத் தடுப்புச் சுவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு தினேஷ் இறந்தாா். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

Advertisement