முகப்பு
சென்னை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

Updated On : 20 ஏப்ரல், 2024 at 12:15 AM
பகிர்:

எண்ணூா் பகுதிக்குட்பட்ட கிராமங்களின் வாக்காளா்கள் தோ்தலை புறக்கணிப்பதாக அறிவித்த முடிவை கைவிட்டு அனைவரும் வாக்களித்தனா்.

சென்னை, எண்ணூா் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் ஆலையில் சமீபத்தில் நிகழ்ந்த விபத்தால் அமோனியா வாயு வெளியேறி சுற்றியுள்ள கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த ஆலையை மூட வலியுறுத்தி, அப்பகுதியில் உள்ள மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், பெரியகுப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 33 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாக ஒன்றுகூடி முடிவெடுத்தனா். அதிகாரிகள் சமாதானத்தையடுத்து, தோ்தல் புறக்கணிப்பைக் கைவிட்டு கிராம மக்கள் அனைவரும் தோ்தலில் வாக்களிக்க வந்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments