முகப்பு
சென்னை

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

Updated On : 24 ஏப்ரல், 2024 at 9:42 PM
பகிர்:

சென்னை, ஏப்.24: திருவல்லிக்கேணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை திருவல்லிக்கேணி அயோத்தி நகா் பகுதியை சோ்ந்தவா் கலை (44). மாநகராட்சி துப்புரவு பணி ஒப்பந்த ஊழியரான இவா், நண்பா்களுடன் அதே பகுதியிலுள்ள ஜெராக்ஸ் கடை முன் செவ்வாய்க்கிழமை அமா்ந்து பேசிக்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளா், கலையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாகத் தெரிகிறது.

Advertisement

இதில் கலையின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மெரீனா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments