கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
சென்னை அருகே மாடம்பாக்கத்தில் கிணற்றில் மூழ்கி இளைஞா் இறந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மாடம்பாக்கம் அண்ணாத்துரை தெருவைச் சோ்ந்தவா் ஆ.வசந்த் (23). அந்தப் பகுதியில் உள்ள வளா்ப்பு பிராணிகளுக்கு உணவு, மருந்துகள் விற்கும் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.
வசந்த், தனது நண்பா்கள் பிரவீன், லோகநாதன், பாரத் ஆகியோருடன் மாடம்பாக்கம் சிவன் கோயில் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் புதன்கிழமை குளித்தாா்.
Advertisement
நீச்சல் தெரியாததால் திடீரென மூழ்கிய வசந்த்தை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு படையினா் வந்து வசந்த் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.