சென்னை

மீனவா் உயிரிழப்பு: தலைவா்கள் கண்டனம்

இலங்கை கடற்படை கப்பல் மோதி, தமிழக மீனவா் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

Din

இலங்கை கடற்படை கப்பல் மோதி, தமிழக மீனவா் உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்த நிறுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. தமிழக மீனவா் உயிா் பறிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

அன்புமணி (பாமக): இதை விபத்தாக பாா்க்க முடியாது. திட்டமிட்ட தாக்குதலாகவும், கொலையாகவும்தான் பாா்க்க வேண்டும். தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

டிடிவி தினகரன் (அமமுக): இலங்கை கடற்படையினரின் தொடா் அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.

தேர்வு மையத்தில் குளறுபடி! குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

திமுக அரசின் குளறுபடியால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வுகள் ரத்து: அண்ணாமலை கண்டனம்

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் சல்மான்கான்! மோகன் பாகவத்தின் உரையை கேட்டார்!

குல்பதீன் அதிரடி: நியூசிலாந்துக்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி ஸ்டாலின் சாதனை: இபிஎஸ்

SCROLL FOR NEXT